விதியோ... வேளையோ
வேற்று நாடுகளில்
அகதிப் பதிவுகளோடு நாம்.
சொர்க்கம்தான்
சொந்தம் இல்லை.
இரத்தக் கறை
குறைந்தபாடாயில்லை
இலங்கைப் படத்தின்
விளிம்புகளில்.
சோமாலியாவை விட
கேவலமாய்
எம் வருங்காலச்
சந்ததிகள்.
களையிழந்து
கல்வியிழந்து...
பேரினவாதிகளின்
புதைகுழிகளுக்குள்
மனச்சாட்சியும்
மனிதாபிமானமும்
புதைந்தபடி.
தலையில்லா முண்டங்களும்
தாய் தந்தையில்லா
குழந்தைகளுமாய்
வரங்களும்
சாபங்களும்
பெற்ற
சபிக்கப்பட்ட
இனமாய்
தமிழ் இனம்
இலங்கத் தீவில்.
வாழ்வின்
அத்தனை ஆசைகளும்
அடக்கி ஒடுக்கப்பட்டு
கண் முன்னே
கடத்தப்பட்ட
நிலையில்
வேற்று நாடுகளில்
அகதிப் பதிவுகளோடு
நாம்!!!!!!!!
Saturday, November 5, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment